பெரம்பலூர், மே 12-
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூ ரில் மாவட்ட ஆட்சி யர் க.கற்பகம் தலை மையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற் றது.
போட்டியை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா. சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிர பாகரன் ஆலத்தூர் ஒன்றியக் குழு தலை வர் என்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 585 காளைகளும், 257 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டி யில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக் குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர்.