பாபநாசம், ஏப்.28-
பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற் கான (ஜல் ஜீவன் மிஷன்) திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலை வர் உஷா, துணைத் தலை வர் முத்துச் செல்வம், அரசு தலைமை கொறடா செழியன் வாழ்த்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எச்.ஜவா ஹிருல்லா (பாபநாசம்), நீலமேகம் (தஞ்சாவூர்), சந்திரசேகரன் (திருவை யாறு), நிவேதா முருகன் (பூம்புகார்), கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், மாவட்டக் கவுன்சிலர் தாம ரைச் செல்வன், தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறி யாளர் கருணாகரன், தலைமை பொறியாளர் முரளி உட்பட பலர் பங்கேற்ற னர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, ஜல் ஜீவன் மிஷன் திட்ட பாபநாசம் மற்றும் அம்மா பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான அடிக் கல்லை திறந்து வைத்தார்.
இதில் பாபநாசம் ஒன்றி யக் குழுத் தலைவர் சுமதி, அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.