தஞ்சாவூர், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளியில் காந்தியப் பொருளாதார மேதை டாக்டர் ஜே.ஸி.குமரப்பாவின் 133 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொரு ளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, ஜே.ஸி. குமரப்பாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,உரையாற்றினார். இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை, கல்விப்புல இயக்குநர் அஸ்வின் கணபதி, முதல்வர் சர்மிளா மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.