districts

img

திருமயம் ஒன்றியச் செயலாளராக ஜெ.வைகைராணி தேர்வு

புதுக்கோட்டை, அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமயம் ஒன்றி யச் செயலாளராக ஜெ. வைகைராணி தேர்வு செய் யப்பட்டார். கட்சியின் புதுக் கோட்டை மாவட்டம் திரு மயம் ஒன்றிய மாநாடு நச்சாந் துப்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு  சண்முகம், அகிலா ஆகி யோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடியை மாவட்டக்  குழு உறுப்பினர் சி.ஜீவா னந்தம் ஏற்றி வைத்தார். ஆர். பழனிவேல் வரவேற்பு ரையாற்றினார்.  மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன் உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.சுசிலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 9 பேர் கொண்ட  ஒன்றிய குழுவின் செயலா ளராக ஜெ.வைகைராணி தேர்வு செய்யப்பட்டனர். இவர் புதுக்கோட்டை மாவட்டத் தின் முதல் பெண் இடைக் கமிட்டி செயலாளர் என்பது  குறிப்பிடத்தக்கது. மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன் நிறைவுரையாற்றினார்.   வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.