திருவாரூர், மார்ச் 5 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவா ரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.இராம மூர்த்தி தலைமை வகித்தார். கௌரவத்தலை வர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ் செல்வன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ப.திரவியம், மாநில பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். மாநில தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன், மாநிலப் பொருளாளர் மு.மகாலிங்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தை ஏப்ரல் 6 அன்று மாநிலம் முழுவதும் கொடி ஏற்றி கொண் டாட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இள நிலை பொறியாளர்களுக்கு உதவிப் பொறி யாளர்களுக்கு இணையாக ஊதியம் நிர்ண யம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலா ளர்களின் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.