districts

img

தென்னை சார் தொழிலாளர்களுக்கு ‘கேரா சுரக்சா’ காப்பீடு திட்டம் அறிமுகம்

தஞ்சாவூர், ஜன.23-  ஒன்றிய அரசின் வேளாண்  மற்றும் உழவர் நல அமைச் சகத்தின் கீழ் செயல்படும், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை விவசாயி கள் நலக்குழு உடன்  இணைந்து, தென்னை மர மேறும் தொழிலாளிகளுக் கான காப்பீட்டு திட்டம் தொடர்பான வட்டார  அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் எம்.சுருளிராஜன்  தலைமை வகித்து, தென்னையை தாக்கும்  நோய்கள், பூச்சி தாக்குதல், கட்டுப்படுத்தும் வழிமுறைகள், அதிக விளைச்சல் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.  பின்னர் தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் ப.முருகானந்தம் பேசுகையில், “ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரி யம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியு டன் இணைந்து பயனாளிகள் 25 சத வீதம் தொகையாக ரூ.94, வாரியம் 75 சதவீதம்  தொகையாக ரூ.281 செலுத்தி, ஆண்டு பிரிமீயமாக ரூ.375 கட்டணத்தில் பிரத்யேக மாக, தென்னை சார் தொழிலாளர்களுக் கான, ‘கேரா சுரக்சா இன்சூரன்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன்மூலம் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், ரூ.5 லட்சம் காப்பீட்டு  தொகையாக வழங்கப்படும். உடல் ஊனம்  அடைந்தால் ரூ.2.5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை வழங்கப்படும். மேலும், மருத்துவ சிகிச்சை  காலத்தில் வாரம் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம், 6 வாரத்திற்கு குடும்ப வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படும்” என்றார். தென்னை விவசாயிகள் நலக் குழு தலை வர் ஆர்.எஸ்.வேலுச்சாமி (குருவிக்கரம்பை),  டி.சந்திரமோகன் (ஆண்டிக்காடு), சரவண முத்து (பேராவூரணி-பெருமகளூர்) ஆகி யோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல் பட்டனர்.  இதில், தேங்காய் பறிக்கும் தொழிலா ளர்கள், தென்னை மரத் தொழிலில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்கள் 150-க்கும் அதிகமா னோர் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற் பட்டோரிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய் யப்பட்டது. தென்னை வளர்ச்சி வாரிய அலுவ லர் பார்வதி பிரியன் நன்றி கூறினார்.