கும்பகோணம், ஜூன் 19- கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் தலைமையில் ஜமாபந்தி என அழைக்கப்படும் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது ஜமாபந்தியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது கும்பகோணம் தொகுதி மக்கள் தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தீர்வு கண்டு 2 பேருக்கு, வீட்டுமனை பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கி னர். நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடே சன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.