districts

img

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் உமா மகேஸ்வரி (சமூக பாதுகாப்பு திட்டம்), பட்டுக்கோட்டை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களை கண்டறிந்து, நேரில் சென்று நலவாரிய பதிவுகளை மேற்கொண்டார். பின்னர் அவர்களுக்கு நலவாரிய அட்டையை வழங்கினார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.