districts

பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கும்பகோணம், ஜூலை 23 -

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடை பெற்றது.

   முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசைக் கண்டித்தும், பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசுத் துறைகளை கண்டித்தும் விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், மேகதாது வில் கர்நாடக அரசு அணை கட்டுவதை ஒன்றிய அரசு  தடுக்க வேண்டும். அனைத்து வகையான பயிர் கடன்கள்  மற்றும் கால வரையறைகள் குறித்து கையேட்டில் அச்சடித்து அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். சங்கராங்குடி வாய்க்கால் திருப்பத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன. எனவே இந்த இடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு கோட்டாட்சியர் பதிலளிக்கையில், விவசாயி களின் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை ரீதியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.