திருவாரூர், செப்.21 - இக்கோ டோக்கியோ நிறுவனம் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு அறி வித்துள்ள பட்டியல் முறைகேட்டை கண்டித்தும், 573 கிராமங்களுக்கு பிரீமியம் செலுத்திய நிலையில் 72 கிராமங்களுக்கு மட்டும் மிக குறைவாக இழப்பீடு அறிவித்துள்ளதை கண்டித் தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித் தார். மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன உரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் எம். சேகர், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சிறு, குறு விவசாயி களுக்கும் கடன் வழங்க வேண்டும். உரத் தட்டுப்பாட்டை உடனே சரி செய்ய வேண்டும். தனியார் உரக்கடை யில் உரம் வாங்கினால் நுண்ணூட்டம் வாங்க கட்டாயப் படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தா மல் கடலுக்கு அனுப்புவதை தடுத்து, கடைமடை பகுதிகளுக்கு முழுமை யாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரப்படாத சி.டி. பாசன வாய்க்கால்களை நூறு நாள் வேலை திட்டத்தில் தூர்வார நடவடிக்கை எடுத்திட வேண்டும். இக்கோ டோக் கியோ நிறுவனம் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு அறிவித்துள்ள பட்டியல் முறைகேட்டை கண்டித்தும், 573 கிராமங்களுக்கு பிரீமியம் செலுத்திய நிலையில் 72 கிராமங்களுக்கு மட்டுமே மிகக் குறைவாக இழப்பீடு அறி வித்துள்ளது. இதை முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வா கிகள் எஸ்.சாமிநாதன், எம்.ஜெயபிர காஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.