கடமலைக்குண்டு, பிப்.12- தேனி மாவட்டம் கட மலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொட ர்ந்து யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படு கிறது. இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் நுழை யும் யானைகள் அங்கிருக் கும் தென்னை மரங்களை அடியோடு சேதப்படுத்தி வரு கிறது. கடமலைக்குண்டு, தாழையூத்து உள்ளிட்ட பகு திகளில் கடந்த மூன்று மாதங் களில் மட்டும் 300-க்கும் மேற் பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவ தால் மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் இரவு நேரங்க ளில் தோட்டங்களுக்கு செல்ல அச்சப்பட்டு வரு கின்றனர். இந்த நிலையில் திங்களன்று இரவு கடம லைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் பால கிருஷ்ணன், சடையத்தேவர், நாட்டாமை ஆகியோர்களின் தோட்டங்களில் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட மரங் களை வேருடன் பிடுங்கி எறி ந்து விட்டு சென்றுள்ளது. மேலும் தோட்டத்திற் குள் புகுந்த யானையை தினேஷ்குமார் என்பவர் விரட்ட முயன்றார். அப் போது யானை துரத்திய தால் அவர் தப்பி ஓடினார். அதேபோல விவசாய தோட் டத்திற்குள் இருந்த விவசாயி கள் சிலரையும் யானைகள் துரத்தி உள்ளது. காய்க்கும் பருவத்தில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் காட்டு யானைகளால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ள தால் கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகியது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். மேலும் எந்த நேரத்தில் யானை தோட்டத்திற்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்துடன் விவசாயிகள் தோட்டத்திற்கு சென்று வரு கின்றனர். இதற்கிடையே தற்போது யானை வந்த பகு தியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மேலப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் ஆகிய கிராமங்கள் அமைந் துள்ளன. இதனால் கிராமத் திற்குள் யானை நுழைந்து விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக தொடரும் காட்டு யானை கள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்க ளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கண்ட மனூர் வனச்சரக அதிகாரி களிடம் கேட்டபோது, கட மலைக்குண்டு பகுதியில் காட்டு யானைகள் நடமாட் டத்தை கட்டுப்படுத்தும் வித மாக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்க உள்ளதாக வும், அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வரு வதாகவும் விரைவில் அகழி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.