திருச்சிராப்பள்ளி, ஆக.5-
திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டியில், புதுமையான கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை செயல் இயக்குநர் மருத்துவர் டி.செந்தில்குமார் கூறும்போது, “காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இதயவியல் சிகிச்சை நிபு ணர்களால் ஒரு புதுமையான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி உத்தி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்பிட்டல் அதெ ரெக்டாமி என்று அழைக்கப்படும் இப்புதிய மருத்துவ செயல்முறை உத்தியானது, தமிழ்நாட்டின் டெல்டா பிராந்தியத்தில் அறி முகம் செய்யப்படுவது இதுவே முதன்முறை யாகும்.
இதயம் சார்ந்த ரத்த நாளங்களில் இறுகி கடினமாகியிருக்கிற கால்சியம் படிமங்களை உடைத்து, துகள்களாக்கி அகற்றுவதற்கும், ரத்த நாள அடைப்புகளினால் அதிக சிக்க லான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு கரோ னரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை மேற்கொள்வதற்கும் இது ஒரு புதிய வழி முறையாகும்.
ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்த நாள குறுக்கத்தில் படிந்து, இறுகியிருக்கிற கால்சியத்தை உடைத்து சிதைப்பதற்கு, 1.25 மி.மீ. அளவுள்ள ஒரு வைர உலோகத்தி னாலான கிரவுன் இந்த நவீன உத்தியில் பயன் படுத்தப்படுகிறது. இதன்மூலம், ஸ்டென்ட் டைப் பொருத்துகிற கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை இது ஏதுவாக்கு கிறது.
இந்த மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் மற்றும் முதன்மை மின்-உடலியங்கியல் வல்லுநரான மரு.ஜோசப், இந்த நவீன மருத்துவ செயல்முறையை வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் இதுவரை, இந்த நவீன உத்தியால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பயனடைந்திருக்கின்றனர். அந்த வசதி தற்போது நமது மருத்துவமனையில் உள்ளது” என்றார்.
இதுகுறித்து மருத்துவர் ஜோசப் பேசுகையில், “இந்தியாவில் மிக சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நவீன உத்தி இது. சிறுநீரக நோய் பாதிப்புள்ள 69 வயதான ஒரு நோயாளிக்கு கடுமையான கால்சியம் படிம கரோனரி தமனி நோயும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மருத்துவ செயல் முறையை பயன்படுத்தி உள்ளோம்” என்றார்.
பேட்டியின் போது அறுவை சிகிச்சை பிரிவு பொது மேலாளர் ஆண்ட்ரோஸ் நித்திய தாஸ், நிர்வாக மருத்துவ அதிகாரி மரு.சாந்தி, பொது மேலாளர் மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.