திருவாரூர், ஆக.23 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு மற்றும் திரு வாரூர் கிளை சார்பாக செப்.18 லிருந்து 22 வரை தைலம்மை தியேட்டரில் 8 ஆவது சர்வதேச திரைப்பட விழா ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான வரவேற்பு குழு கூட்டம் திருவாரூர் செல்வீஸ் கூட்டரங்கத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் ஜீ.வெங்கேடசன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்டா லின் சரவணன் துவக்க உரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் சர்வதேச திரைப்பட விழா நோக்கத்தை விளக்கியும் வரவேற்பு குழு பொறுப்பாளர்களை அறிவித்தும் உரை யாற்றினார். அரசு ஊழியர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மற்றும் வெகுஜன அரங்கத் தின் நிர்வாகிகள் சர்வதேச திரைப்பட விழா வெற்றி பெற வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், எழுத்தாளருமான ஐ.வி.நாகராஜன் வரவேற்பு குழு தலைவராகவும், ஜீ.வெங்கடேசன் செயலாளராகவும், எம்.செல்வராஜ் பொருளாளராகவும், துணை தலைவராக எஸ்.தியாகராஜன், எம்.சௌந்தரராஜன் உட்பட 20 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. டிஜிட்டலில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செப்டம்பர் 18 அன்று துவங்கி 22 வரை 5 நாள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா விற்கான கட்டணமாக ரூ.1000-ஐ அறிவித்து, டிக்கெட்டை டிஜிட்டலில் பெறும் வசதியை கவிஞர் சரஸ்வதி தாயுமானவன், மூத்த தோழர் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் வெளி யிட, எல்ஐசி அரங்க பொறுப்பாளர் செந்தில், டிஜிட்டல் வசதியில் ரூ.1000 செலுத்தி முதல் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், திருவாரூர் கிளை நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.