districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சிராப்பள்ளி, செப்.30 - திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியொருவர் சனிக்கிழமை இரவு  உயிரிழந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிபிஎம் தலைமையில் மூன்றாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். திருச்சி மாவட்டம் முத்தரச நல்லூர் அருகேயுள்ள பழூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திராவிட  மணி (40). இவர் ஜீயபுரம் காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  சட்ட விரோதமாக மது விற்பனை யில் ஈடுபட்டதாக கூறி, ஜீயபுரம் போலீசாரால் செப்டம்பர் 27 அன்று கைது செய்யப்பட்டு, அன்று இரவு  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். அவருக்கு சனிக்கிழமை இரவு  திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி யுள்ளார். சிறை மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியதையடுத்து, உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர்  போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதற்கிடையே திராவிடமணி இறந்த சம்பவம் குறித்து தகவலறிந்த  அவரது மனைவி மற்றும் உறவி னர்கள், அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை திராவிட மணியின் உடலை பார்க்க அனுமதிக் காததால், அரசு மருத்துவமனை முன்பு சனிக்கிழமை நள்ளிரவு சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திராவிட மணியின் உடலைப் பார்க்க அனுமதிப்பதாக போலீசார் உறுதி யளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து திராவிட மணி யின் உடலில் காயங்கள் இருப்பதால்  உரிய விசாரணை நடத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடு பட்டவர்களை சமாதானம் செய்த னர். என்றாலும் உறவினர்கள் ஏராள மானோர் மருத்துவமனை வளாகத் தில் குவிந்திருந்தனர். இதை யொட்டி பாதுகாப்புக்காக போலீசா ரும் குவிக்கப்பட்டனர். மாலையில்,  உடற்கூறாய்வுக்குப் பின்னர் திராவிட  மணி உடலை உறவினர்களிடம் ஒப்ப டைக்க தயாரான நிலையில், உடலை  வாங்க மறுத்து திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலை அருகே சிபிஎம் தலைமையில் உறவி னர்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.  அவரது இறப்புக்கு காரணமா னவர்களை கண்டறிந்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், மருத்து வர்கள் குழு அமைத்து மீண்டும் உடற் கூறாய்வு செய்ய வேண்டும். இறந்த வரது குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளான திங்களன்று அவரது உறவி னர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போ ராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.  போராட்டத்தை விளக்கி மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி கேயன், மாறன், இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் மோகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர்  பேசினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.