districts

img

கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூர், பிப்.9-  கடைமடை வரை தடை யின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை கூடுதல்  தலைமைச் செயலர் அதிகாரி களுக்கு அறிவுறுத்தி யுள்ளார். முதலமைச்சர் ஆணை யின்படி, பொதுப் பணித் துறை நீர்வள ஆதாரத் துறை யின் வெண்ணாறு வெட் டாறு நீர் ஒழுங்கு தலைப்பில்,  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வந்துள்ள நீரின் வரத்து குறித்து, தஞ்சா வூர் மாவட்டம் தென்பெரம் பூர் ஊராட்சியில், பொதுப்  பணித்துறை நீர்வள ஆதா ரத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்  சக்சேனா, மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தண்ணீர் முறையாக கடைமடை வரை சென்று சேரவும், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவும், விவசாயிகள் பயன்பெற வும், சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் நடவடிக்கை மேற் கொள்ள கூடுதல் தலை மைச் செயலாளர் அறிவுறுத் தினார். பின்னர், தஞ்சாவூர் ஒன்றியம் சமுத்திரம் ஏரி யில் அமைக்கப்பட்டு வரு கிற பூங்காவின் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த னர். ஆய்வின்போது திருச்சி  மண்டல தலைமை பொறி யாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியா ளர்கள் கலந்து கொண்ட னர்.