districts

திருச்சி முக்கிய செய்திகள்

விடுதி, இல்லங்கள்  உரிமம் பெற அறிவுறுத்தல்

அரியலூர், ஜூன் 20- அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

இந்த உரிமம் பெறாத விடுதிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

ஜூன் 28 புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன்.20-  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப் பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். 

எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர்சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், விவசாயம் தொடர்புடைய கோரிக்கை களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூன் 20- ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் பெற தகுதியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தெரிவித்தது: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 26.1.2025 அன்று குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள்(பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம)வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் என வித்யாசமின்றி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்  என்ற   இணையதள முகவரியில் ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் கைப்பேசி 7401703499  என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

அக்னிவீர் ஆள் சேர்ப்பிற்கான முகாம் 

மயிலாடுதுறை ஜூன்- இந்திய விமானப்படைக்கான அக்னிவீர்வாயு (இசைக்கலைஞர்) இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வருகின்ற 03.07.2024 முதல் 12.07.2024 வரை கர்நாடக மாநிலம், பெங்களூரு விமானப்படை தேர்வு மையத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22.05.2024 முதல் 05.06.2024 வரை இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மேற்படி முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.