districts

img

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, பிப்.28-  புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, வியாழக்கிழமை இரவு நேரில் ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் தெரிவிக்கையில்,  புதுக்கோட்டை மாநகராட்சி தற்காலிக பேருந்து நிலையத்தில், பேருந்துகள் சென்று வருவதற்கான வழித்தடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் அமருவதற்கான இடங்கள், பேருந்துகள் நிறுத்துமிடம், சுகாதார வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, பேருந்து கால அட்டவணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்காலிக கழிப்பறையினை சுகாதாரமான முறையில் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுத்திட, தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், மாநகர நல அலுவலர் காயத்ரி, உதவிப் பொறியாளர் கலியக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.