கரூர், செப்.9 - பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளி யில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை, ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நட வடிக்கை எடுப்பது தொடர்பான மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: இக்கூட்டத்தில் பள்ளி அளவிலான முதல் மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு நடத்த வேண் டும். பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் களின் விவரங்களை, வாரந்தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரி விக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளை, பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு மேல் வராத இடைநிற்றலாக வாய்ப்புள்ள குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவதை, வட்டார மற்றும் பள்ளி அளவி லான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழி காட்டுதல் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களையும் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங் களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மாணவர்களை வேலைக்கு அனுப் பும் பெற்றோர்களுக்கு, அவர்களின் குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதற்கான உதவி களைச் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.