பெரும் பதிவேடு திட்டத்தின் கீழ் சுயவிவரங்களை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தஞ்சாவூர், பிப்.9- தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு, விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை “விவசாயிகள் பெரும் பதிவேடு” என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் 893 வருவாய் கிராமங்களில் உள்ள 1.25,593 விவசாயிகள் பதிவு செய்யப்பட உள்ளனர். இந்த விவசாயிகள் பெரும் பதிவேடு வேளாண்மை துறை, தோட்டக்கலை கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை. உணவுத்துறை, பொதுப்பணித்துறை. வேளாண் வணிகத்துறை, ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெற இயலும். இப்பெரும் பணியினை ஒருங்கிணைந்து செயல்படுத்திட மகளிர் திட்டம், சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள அவர்களின் ஆதார் நகல், நிலப்பட்டா நகல், ஆதார் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும். எனவே, விவசாயிகள் அவர்களின் நில உடைமைகளை சரிபாரத்திடவும், வேளாண்மை சார்ந்த நலத் திட்டங்களை பெற்றிடவும் தங்களின் கிராமங்களைத் தேடி வரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும்” மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து வேனை சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்த கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடினர் . உடனே வேனை கைப்பற்றி காவல் நிலை யத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். அதில் தலா 30 கிலோ எடையுள்ள 80 மூடை இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்ததாக தெரியவந்தது. பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய தேனி ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம்
தேனி, பிப்.9- தேனி மாவட்ட புதிய ஆட்சியராக சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சிறப்பு செயல் திட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மாநகாட்சி ஆணையர் ரஞ்சித் சிங் புதிய தேனி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 2015 பேட்ஜ், 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்சித் சிங், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆவார். குன்னூர், நாகப்பட்டினத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர். பின்னர் கால்நடை பராமரிப்புத் துறை யின் துணைச் செயலாளராகவும் பணி புரிந்துள்ளார்.
இறைச்சி தராத ஆத்திரத்தில் சடலத்தை கடை முன்பு போட்ட நபர் காவல்துறை விசாரணை
தேனி, பிப்.9- தேனி அருகே இலவசமாக இறைச்சி கேட்டு தராத தால் ஆத்திரத்தில் சடலத்தை கடைக்கு முன்பு போட்டுச் சென்ற நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் மணியரசன் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வரு கிறார். ஞாயிறன்று வழக்கம் போல காலையில் இருந்தே இறைச்சி வாங்க வாடிக்கையாளர்கள் வந்து கொண்டி ருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ப வர், மணியரசனிடம் தனக்கு இலவசமாக இறைச்சி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கடை உரிமையாளர் கறி தர மறுத்ததால், அவரை மிரட்டிய குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்று சிறிது நேரத்தில் மயானத்தில் புதைக்கப்பட்ட ஒரு சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பாக போட்டுச் சென் றுள்ளார். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறை யினர் அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி, இது யாருடை யது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலத்தை போட்டுச் சென்ற நபரான குமாரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தரமற்ற சாலையால் அவதிக்குள்ளான பொதுமக்கள் ஓராண்டுக்குள் சேதம் அடைந்தது
இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டது. சேந்தனி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள இந்த தீய ணைப்பு நிலையத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப் பட்டது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறிய தால் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாகனத்தை அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. மேலும், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் வாக னத்தில் நீர் நிரப்பி சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து, மெட்டல் சாலையை தார் சாலையாக கடந்த ஓராண்டுக்கு முன்பு மாற்றப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ள தால் தீயணைப்பு வாகனத்தை அவசர காலத்தில் எடுக்க முடியாமல் மீண்டும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் சேதமடைந்த தார் சாலையை விரை ந்து செப்பனிட்டு தரமான தார்ச் சாலை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர் களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கன்றுகள் நடும் விழா
சின்னாளப்பட்டி, பிப்.9- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரண்மனை கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாகவும், மீண்டும் ஆக்கிரமிப்புகளை தவிர்க்கும் பொருட்டும் நீர்நிலைப் பாதுகாப்பு தன்னார்வக் குழு தலைவர் தமிழ்செல்வன் செல்வராஜ் தலைமையில், தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா முன்னிலையில் பனைவிதை, வேப்பமரம், புங்கமரம், புளியமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் வெள்ளாளப்பட்டி பகுதி நீர்நிலைப் பாதுகாப்பு தன்னார்வக் குழு பொறுப்பாளர்கள் பொன் ராஜ், கண்ணையன், நாகராஜ், ராஜசேகர், வேலுமணி, தன்னார்வ மகளிர் குழுவினர் உட்பட சமூக ஆர்வ லர்கள் அர்ஜுன், பொறியாளர் இளங்கோ, முனி யாண்டி, அழகுபாண்டி, செம்பட்டி சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துளிர் இல்லம் துவக்க விழா
இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரம் மாவட்டம் மாத வனூர் ஊராட்சியை சேர்ந்த நரி யனேந்தல் கிராமத்தில் துளிர் இல்லம் துவக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் தலைமையேற்றார். கிராமத்தலைவர் அழகர், வார்டு உறுப்பினர் கு.ராமகிருஷ் ணன், நயினார் கோயில் வட்டார பொறுப்பாளர்கள் வின்சென்ட் வீரு, மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துளிர் இல் லத்தை துவக்கி வைத்து அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் கு.காந்தி விளக்கி பேசினார். துளிர் இல்ல ஒருங்கி ணைப்பாளர் ரா.ஜெகதீஷ் குமார் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து வர்ஷித், சதன் ஜீவி ஆகியோர் செய்முறை பயிற்சி மூலம் விளக்கினர். போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாண வியர்களுக்கு கிராமத் தலைவர் கள், ஆசிரியர் சமயத்தேவன் ஆகி யோர் பரிசு வழங்கினர்.
பல்கலைக் கழக மானிய புதிய விதி ரேசன் கடை ஊழியர் போல் இனி துணைவேந்தர் நியமனம் இருக்காதாம்!
பாஜக மாணவர் அமைப்பினர் கொக்கரிப்பு மதுரை, பிப்.9- மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகு தியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தென் தமிழகம் 30வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 7 - 9 தேதிகளில் திருப்பரங் குன்றம் விளாச்சேரி பகுதியில் அமைந் துள்ள சௌராஷ்ட்ரா கல்லூரியில் நடை பெற்றது. அதனொரு பகுதியாக சனியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பேசுகையில், பல்க லைக் கழகங்கள் துணைவேந்தர் நியம னத்தில் பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். துணை வேந்தர் நியமனக்குழுவில் 4 பேர் உள்ள னர். இருவர் பல்கலைக்கழக மானி யக்குழு உறுப்பினர்கள். ஒருவர் கவர்னர், மற்றொருவர் தமிழக அரசுப் பிரதிநிதி. இதன் மூலம் பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் தவிர்க்கப்படும். ஆங்கி லம் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பி.எச்.டி பட்டம் பெறுகின்றனர். ரேசன் கடை ஊழியர் போல் இனி துணைவேந்தர் கள் நியமனம் இருக்காது என்று கொக்க ரித்தனர். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் மாநாட் டுப் பிரதிநிதிகள் ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளி வாகனங்களிலும், SAKSHAM (மாற் றுத்திறனாளிகள் நலன் விரும்பும் அமைப்பு) வாகனங்களிலும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
விருதுநகர் சந்தை கடலை எண்ணெய், துவரம் பருப்பு விலை குறைவு உளுந்து, பாசிப் பயறு விலை உயர்வு
விருதுநகர், பிப்.9- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. பாசிப் பயறு, உளுந்து ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ.2,650க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 குறைந்துள் ளது. எனவே, ரூ.2.600க்கு விற்பனை செய் யப்படுகிறது. மல்லி 40 கிலோ லயன் வகை ரூ.3,450 முதல் ரூ.3,600 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.3,600 முதல் ரூ.3,750 வரை விற் கப்படுகிறது. அதேவேளை மல்லி நாடு வகையா னது கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 4,300க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்து தற்போது ரூ.3,800 முதல் ரூ. 4,600 வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு புதுசு நாடு வகை 100 கிலோ ரூ.10,700க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 குறைந்து ரூ. 10,500க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு லயன் வகை ரூ.11,100 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையா னது. இந்த வாரம் ரூ.900 வரை குறைந்து தற்போது ரூ.10,200 முதல் ரூ.10,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து நாடு வகை 100 கிலோவின் விலை ரூ.6,600 முதல் ரூ.7,100 வரை விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.600 உயர்த்தப்பட் டுள்ளது. எனவே, ரூ.7,200 முதல் ரூ. 7,700க்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு நாடு வகை கடந்த வாரம் ரூ.7,800 முதல் ரூ.8,100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7,950 முதல் ரூ.8,150 வரை விற்பனை யாகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.