districts

முதியோர், குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு

திருவாரூர், ஆக.2-  

     திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் மற்றும் பத்தூர் மேல்கரையில் உள்ள  முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

     இம்முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும்  முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதி கள், உணவு, மருத்துவம், சமையல்கூடம், குளியலறை,  முதியோர்களை பராமரிப்பது தொடர்பான பதிவேடு களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.  

    கொரடாச்சேரி ஒன்றியம், பத்தூர், மேல்கரை பகுதி யிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமைய லறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். பின்னர், குழந்தைகளிடம் கலந்துரை யாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அந்த  குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டிற்கான அட்டை கள் மற்றும் எழுதுபொருட்கள், புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.