districts

img

மழை பாதித்த இடங்களில் குமரி ஆட்சியர் ஆய்வு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைப்பு

நாகர்கோவில், நவ.3-  குமரி மாவட்டத்தில் மழையால் பாதித்த இடங்களில் ஆட்சியர் ஆர். அழகுமீனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.  வெள்ளம் புகுந்த இடங்களில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையினால் புது கிராமம் தாழ்வான  குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பாக  கன்னியாகுமரி பேரிடர் மேலாண்மை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்ததோடு, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.  கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை கிராமம், பார்த்திவபுரம் அரசு நடுநிலைப் பள்ளி தற்காலிக நிவாரண முகாமை ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு எதிர் வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை கள் வழங்கினர். கோதையாறுக்குட்பட்ட மோதிரமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பேச்சிப்பாறை பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மோதிர மலை பகுதியில் ஆய்வில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஈடுபட்டபோது, நடமாடும்  கால்நடை மருத்துவ வாகனம் அங்கே வந்தது.  அதனை மறித்த ஆட்சியர், பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு துரிதமாக செயல்பட அறிவுறுத்தியதுடன், கால்நடை மருத்துவரையும் போனில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து அவருக்கும் அறிவுறுத்தல் செய்தார்.