கரூர், ஏப்.25-
கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் ஆண்டாய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் வளாகத்தின் சுற்றுப்புறத் தூய்மை, அலுவலகத் தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியா ளர்களின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள், கணினி அறை, பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆட்சி யர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் பா. ரூபினா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சைபுதீன். வரு வாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சக்திவேல், கரூர் வட்டாட்சியர் (பொ) ரவிகுமார் முதுநிலை வரு வாய் ஆய்வாளர்கள், இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.