districts

img

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 7-  தஞ்சாவூர் அரண்மனை வளாக கலைக்கூடத்தில் நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, அரண்மனை வளாக சரஸ்வதி மகால் நூலகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற் றம் குறித்தும், அரண்மனை வளாக தர்பார் கூடத்தில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அரண்மனை வளாக சாம்பாஜி குடியிருப்பு பகுதியில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளையும், அரண்மனை வளாக சர்ஜா மாடியில் ரூ. 9.12 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும்  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பாலகணேஷ், உதவிப் பொறியாளர் ஜெ.மணிகண்டன், தொல்லியல் துறை உதவி பொறியாளர்கள் மயில்ராஜ், தினேஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.