மயிலாடுதுறை, ஆக.3 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கிடாரங்கொண்டான், கீழையூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொது விநியோக திட்ட கிடங்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய வைகளை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கிடாரங்கொண்டான் பொது விநியோக திட்ட கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட கூடு தல் தலைமைச் செயலர், கிடங்கிலுள்ள அரிசி மூட்டைகள் பாது காப்பாக உள்ளனவா?, தூய் மையான கிடங்கு பராமரிக்கப் படுகிறதா? என ஆய்வு செய் தார். பின்னர் கிடாரங்கொண் டான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கீழை யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலு வலகத்தை பார்வையிட்டார். பின்னர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை யில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட வரு வாய் அலுவலர் மு.மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொ ருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலா ளர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.