பட்டுக்கோட்டை, மே 12-
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், திருச்சி கோட்ட முதுநிலை இயக்கக மேலா ளர் எம்.ஹரிகுமார் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பொறியியல் பிரிவு, சிக்னல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடையே ரயில்வே பாது காப்பு குறித்த ஆலோசனைகளை எடுத்து ரைத்தார்.
பாராட்டு விழா
பின்னர் திருவாரூர் - பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையை அமைத்து தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு சிறப்பாக பணியாற்றி வரும் பட்டுக்கோட்டை பகுதி நிலைய அதிகாரிகள், கட்டுமானப் பிரிவு, பொறியியல் பிரிவு, சிக்னல் பிரிவு, எலக்ட்ரிக் கல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர் கள், காவல் துறை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் அனைவருக்கும் பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் தலை மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சீனியர் செக்சன் இன்ஜினியர் பழனிவேல் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு பட்டுக் கோட்டை ரயில் நிலைய மேலாளர் மருது பாண்டியன் சார்பில் வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.