புதுக்கோட்டை, ஜன.1- புதுக்கோட்டை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது சிறுவன் குண்டடிபட்டு படுகாயம டைந்த சம்பவம் குறித்து கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வெள் ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த் தாமலை அருகே பசுமலைப்பட்டி யில் துப்பாக்கி சுடும் பயிற்சித்தளம் உள்ளது. இங்கு கடந்த வியாழக் கிழமை மத்திய பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடு பட்டனர். அப்போது பயிற்சி தளத்தில் சக்திவாய்ந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தியின் தலைக்குள் பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவன் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் ்பட்டு பிறகு, மேல் சிசிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு சிறுவனின் தலைக்குள் இருந்த தோட்டா அறு வைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட் டது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவரும் சிறு வன் இன்னும் அபாயக்கட்டத்தைத் தாண்டவில்லை எனத் தெரிவிக்கின்ற னர். சம்பவம் நடந்த நாள்முதல் தொ டர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான எம்.சின்னத்துரை சிறுவனுக்கு உயரிய சிகிச்சை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, நடந்துள்ள சம்பவம் குறித்து பல்வேறு வதந்தி களை போலீசார் கிளப்பி வருவ தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை யன்று துப்பாக்கி பயிற்சித் தளம் அமைந்துள்ள பகுதிகளையும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம டைந்த சிறுவனின் வீட்டையும் எம். சின்னத்துரை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.ஆர்.எஸ். மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ராமையன், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமண வாளன், சு.மதியழகன், அன்னவாசல் ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி, ஊராட்சி மன்றத் தலைவர் வேலு உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதுகுறித்து கருத்துத் தெரி வித்துள்ள எம்.சின்னத்துரை, துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக பயிற்சி தளத்திலிருந்து சுடப்படும் தோட்டாக்கள் செல்லும் வழியான மலைப் பகுதிகளிலும் ஏறி ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி யில் வசிக்கும் மக்களிடமும் நடந்துள்ள சம்பவங்கள் குறித்து கேட்டறியப்பட் டது. குண்டடிபட்ட போது சிறுவன் தங்கியிருந்த குடிசைப் பகுதிக்கும் சென்று அக்கம் பக்கத்தினரிடம் நடந் துள்ள சம்பவம் குறித்து கேட்டறி யப்பட்டது. இந்த ஆய்வின்போது பல தக வல்கள் தெரிய வந்துள்ளன. ஆய்வில் கண்டறியப்பட்ட முழுவிபரத்தையும் அறிக்கையாக தயாரித்து தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க உள்ளேன். நடைபெற உள்ள சட்ட மன்றக் கூட்டத் தொடரிலும் இது குறித்து கேள்வி எழுப்புவேன். மேலும், ஞாயிறன்று (02.01.2022) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிறகு நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பிலும் இது குறித்த தகவலை வெளியிட உள்ளேன் எனத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஐ.ஜியுடன் ஆய்வு
அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்துவரும் சிறுவன் புகழேந்தியை சனிக்கிழமையன்று காவல்துறை திருச்சி மண்டலத் தலைவர் பால கிருஷ்ணனுடன் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை பார்வையிட்டார்.