districts

ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி  மறைமுக ஏலம் நடைபெற் றது

பாபநாசம், ஜூலை 21-

     தஞ்சாவூர் விற்பனைக் குழு, கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி  மறைமுக ஏலம் நடைபெற் றது. பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட  கண்காணிப்பாளர் பிரிய மாலினி முன்னிலை வகித்தார். இந்த ஏலத்தில் கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2724 விவசாயிகள், சராசரி 4000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண் ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.6809,  குறைந்தபட்சம் ரூ.5869, சராசரி ரூ.6439 என விலை நிர்ணயம் செய்த னர். பருத்தியின் சராசரி மதிப்பு- ரூ.2.57 கோடி.