தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவ சாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் தேங்காயை மறை முக ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை முதல் தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் செயலாளர் எம்.சரசு, விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, மேற்பார்வையாளர் பா.வேத முத்து, உதவி வேளாண் அலுவலர் மா.மதியழகன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியை சேர்ந்த விவசாயி கள் 10 குவிண்டால் உரித்த தேங்காய் களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஏலத்தில் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 6 வணிகர்கள் கலந்து கொண்டு தேங்காயை பார்வையிட்டு தரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு டெண்டர் பெட்டியில் போட்டனர். இதில் வணிகர்கள் அதிகபட்ச விலையாக குடுமிக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.24.25 காசும், குடுமி இல்லாத காய் கிலோ ஒன்றுக்கு ரூ.24. 60 காசும், குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.22.50 காசு எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை யடுத்து, விவசாயிகளிடம் இருந்து 10 குவிண்டால் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை யினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.