districts

img

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,ஆக.21-  மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலி யல் வன்கொடுமைக்கு உட்படுத் தப்பட்டு படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து  திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூர், குட வாசல்,நன்னிலம் ஆகிய அரசு கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.  திருவாரூர் திருவிக கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர்  எஸ்.செல்வ பிரகாஷ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் வீ.சந்தோஷ் கண்டன உரையாற்றினார்.  மாவட்டக் குழு உறுப்பினர் மு. சந்தோஷ்வரன்,கிளை உறுப்பி னர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குடவாசல் அரசு கலை அறிவி யல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளை தலைவர் ஆர்.சிவநேசன்  தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சித்,மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள். நன்னிலம் அரசு கலை அறி வியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத்தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார், மாவட்ட குழு உறுப்பினர்கள் சூரியபிரியன், கௌசிகன் ஆகி யோர் கண்டன உரை நிகழ்த்தி னர். போராட்டத்தில் கல்லூரி மாண வர்கள் வகுப்பை புறக்கணித்து பங்கேற்றனர்.  திருச்சிராப்பள்ளி      திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி கிளைச் செயலாளர் அபிராமி தலைமையில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் கண்டன உரையாற்றினார். இதில் கிளை நிர்வாகிகள் கோகுல், கற்பக செல்வி, சதிஷ்  ஆகியோர் கலந்து கொண்டன இந்திய மாணவர் சங்கம் சார்பில் காட்டூர் உருமு தன லெட்சுமி கல்லூரி கிளைத் தலைவர் ஸ்ரீநாத் தலைமையிலும், துவாக்குடி அண்ணா வளைவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புறநகர் மாவட்டத் தலைவர் வைரவளவன் தலை மையிலும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் மோகன், மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.