districts

img

இந்திய சைகை மொழி தினம்: புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, செப்.29 - இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளா தோர் தினத்தினை யொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தில், புதுக் கோட்டை மாவட்ட  ஆட்சியர் மு.அருணா  கையொப்பமிட்டு, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திற னாளிகளின் இந்திய சைகை மொழி தினம்  மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினமா னது செப்.23 முதல் 29 வரை காதுகேளா தோர் வாரம் மற்றும் சைகை மொழி வார மாக கடைப்பிடிக்கப்படுகிறது.   புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,800-க்கும் மேற்பட்ட செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 18 வய திற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மானியத்து டன் கூடிய வங்கி கடன், வருவாய்த் துறையின்  மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500, திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம், பட்டயம், பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம், பணிபுரியும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டண பயணச் சலுகை அட்டை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னு ரிமை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்றார்.