தஞ்சாவூர், ஜூன் 13-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கும்பா சுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14 ஆவது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விவசாயி கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால் காரர், அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க லாம்.
வேளாண் துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 2.17 லட்சம் விவசாயிகளுக்கும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறை யின் கீழ் செயல்படும். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாத னத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றம் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி (விரல் ரேகை மூலம்) ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க லாம்.
இதற்காக மாவட்ட வேளாண் துறை யடன் இணைந்து கிராமங்களில் நடத்தப் படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கி பயன் பெறலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.