திருவாரூர், ஏப்.13 - திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை மதியம் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை முடித்து வந்தனர். அப்போது இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் வேண்டும் என, இந்தியா கூட்டணி தலைவர்கள் இணைந்து துண்டறிக்கை கொடுத்து வாக்குச் சேகரித்தனர். இதைத் தொடர்ந்து அத்திக்கடை கண் தந்த மாரியம்மன் கோவிலில் பிரச்சாரப் பயணம் துவங்கியது. இதில், அத்திக்கடை, புதுத்தெரு, பஞ்ச நதிகுளம், சமத்துவபுரம், திருமெய்ஞானம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கதிர் அரிவாள் சின்னத் திற்கு வாக்குச் சேகரித்தனர். வாக்குச் சேகரிப்பு பணியில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.