புதுக்கோட்டை, ஆக.16-
புதுக்கோட்டையை அடுத்த ராயவயல் கிராம மக்களுடன் சிஐடியு, விச, விதொச அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை இரவு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை ஒன்றி யம் ராயவயல் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர் களுக்கு பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகளை நடத்தியும், பெரியவர் களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் ஆகிய அமைப்பு களின் சார்பில் சுதந்திர தின விழா திங்களன்று இரவு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், விவசா யத் தொழிலாளர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்ட மாநில செய லாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், விதொச மாவட்டச் செயலா ளர் டி.சலோமி, மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், ஒன்றியச் செய லாளர் டி.லட்சாதிபதி, ஒன்றி யக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.