பாபநாசம், செப்.1 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், வளர்ந்து வரும் பேரூராட்சி பகுதியாகும். இதில் கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ் சாலை முக்கியமானது. இச்சாலையில் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. தற் போது இந்தச் சாலை, ஆக்கிரமிப்புகளால் குறுகி வருகிறது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொள்கின்றன. எனவே பாப நாசத்தில் போக்குவரத்து காவலரை நியம னம் செய்ய வேண்டும். சாலையை விரிவாக் கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி சமூக ஆர்வ லர்கள் கூறுகையில், “கும்பகோணம் - தஞ்சா வூர் நெடுஞ்சாலையில் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன. இதில் பாபநாசம் தொடங்கி அய்யம்பேட்டை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம். இந்தச் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்கிரகாரம் தொடங்கி, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். பாபநாசத்தில் சாலையை விரிவாக்கம் செய்வதுடன், சாலையில் கடை வெளியில் விளம்பரப் பலகை வைக்க அனு மதிக்கக் கூடாது. கடை, ஹோட்டல் வாச லில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வு காண வேண்டும். பாபநாசத்தில் போக்குவரத்து காவலர் இருந்த நிலையில், அவர்கள் ஏன் தற்போது அங்கு பணியில் இல்லை என்பது தெரிய வில்லை. எனவே பாபநாசத்தில் மீண்டும் போக்குவரத்து காவலரை நியமனம் செய்ய வேண்டும்” என்றனர்.