districts

img

கோவை, திருப்பூரில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

திருப்பூர், செப்.23 -  தொழிற்சாலை மற்றும் வீட்டுக்  கழிவுகளால் நொய்யல் ஆறு மாசு படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த  ஆற்றை ஒட்டி உள்ள கோவை, திருப்பூர் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய  வந்துள்ளது. பொது சுகாதார நிபுணர் டாக்டர்  பிரபு தலைமையில் 20க்கும் மேற் பட்டவர்கள் நொய்யலில் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது பற்றியும், கோவை, திருப்பூரில் புற்றுநோய் அதிகரிப் பது பற்றியும் ஒப்பிட்டு ஆய்வை செய்துள்ளனர்.  இதில் அதிர்ச்சிகரமான விபரங் கள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக,  கார்சினோஜென்ஸ் எனப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங் கள் நொய்யல் ஆற்று படுகையில் அதிக அளவு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாநக ரங்களில் புற்றுநோய் பரவல் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு குடிநீர் மிக முக்கியமான ஆதாரமா கும். எனினும் அந்த குடிநீரில் கார்சி னோஜென்ஸ் எனப்படும் ரசாயனங் கள், தனிமங்கள் புற்றுநோய் ஏற்ப டுத்தக் கூடியவை என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுக ளில் நொய்யல் நதியில் இந்த ரசா யன கலவை இருப்பதை உறுதிப்ப டுத்தி உள்ளனர். குறிப்பாக காட்மி யம், ஹெக்ஸவலன்ட் குரோமியம்,  நிக்கல், காரீயம், அர்சனிக், நைட் ரேட், நைட்ரைட், பாஸ்பேட் ஆகி யவை இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தில், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அள வைவிட மிக அதிக அளவில் மேற் கண்ட ரசாயனங்கள் இருப்பதும்,  நொய்யல் ஆறு கடுமையாக மாசு பட்டு இருப்பதும் தெரியவந்துள் ளது. இதனால் தமிழ்நாட்டில் மற்ற  மாவட்டங்களை விட கோவை, திருப்பூரில் அபாய கட்டத்தை எட் டும் அளவிற்கு புற்றுநோய் பாதிப்பு  இருக்கிறது. தொழிற்சாலை கழிவு களை முறையாக சுத்திகரிக்காமல்,  ஆற்றிலும், நீர் நிலைகளிலும் விடுவ தால் காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்கள் அதிக மாக ஏற்படுவதாகவும், அத்துடன் நீரையும், மண்ணையும், காற்றை யும் ஆலைக்கழிவுகள் மாசுபடுத்து வதாகவும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  புற்றுநோய் ஏற்படுவதற்கு பல் வேறு காரணங்கள் இருந்தாலும், சூழல் மற்றும் நீர் மாசுபாடு எத் தகைய தாக்கத்தை ஏற்படுத்துகி றது என்று ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக நொய்யல் படுகையை ஒட்டி கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற் படுவதை நீர் மாசுபாட்டுடன் ஒப் பிட்டு பார்த்துள்ளனர்.  இந்த ஆய்வில் அனுமதிக்கப் பட்ட அளவைவிட தீங்கு ஏற்படுத் தும் உலோகங்கள், தனிமங்கள் மிக  அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. தண்ணீர் மாசுபாட்டுக் கும், புற்று நோய் தாக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டு பார்த்த போது, கோவையில் 7.7 சதவீதம் பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயிலும், 6.9% பேர் நுரையீரல் புற்று நோயி லும், 6.7 சதவீதம் பேர் கல்லீரல் புற்று  நோயிலும், 5.1 சதவீதம் பேர்

சிறுநீர கப் புற்று நோயிலும், 3.9 சதவீதம்  பேர் சிறுநீர்ப்பை புற்று நோயிலும், 3.1% பேர் இரைப்பை புற்று நோயி லும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல் திருப்பூரில் 3.2 சத வீதம் பேர் நுரையீரல் புற்று நோயி லும், 2.9 சதவீதம் பேர் ப்ராஸ்டேட் புற்று நோயிலும், 2.9 சதவிகிதம் பேர் சிறுநீரக புற்று நோயிலும், 1.6 சதவீதம் பேர் இரைப்பை புற்று நோயிலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நிலம், நீர் இரண்டிலும் மாநில சராசரியை விட  கோவையிலும் திருப்பூரிலும் மிக  அதிக அளவான மாசுபாடு உள்ளது.  இந்த ஆய்வின் இறுதியில், நிலம், நீர் மாசுபாட்டில் புற்றுநோய் கார ணிகள் இருப்பதை குறைப்பதற் கும், முற்றிலும் நீக்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யம், பொது சுகாதாரத்துறை, உண வுத் தரக் கட்டுப்பாடு அமைப்பு ஆகிய அரசு நிறுவனங்கள் முனைப் புடன் செயல்பட வேண்டும் என்று ஆய்வு குழுவினர் கூறியுள்ளனர். இதுகுறித்து நொய்யல் விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஞானசம்பந்தம் கூறுகையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக நொய்யல் நதி தொழிற்சாலை கழிவு நீர் சாக்கடையாக மாற்றப்பட்டு வரு வதையும், அதனால் ஏற்படும் உடல்  நல பாதிப்புகளை பற்றியும் எச் சரிக்கை செய்து வருகிறோம். பல முறை மாவட்ட ஆட்சியர், மாசுக்கட் டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் இப்பிரச் சனை குறித்து முறையிட்டும் அவர் கள் அலட்சியப்படுத்தி வந்துள்ள னர். தற்போது அறிவியல் பூர்வமாக  நடத்தப்பட்ட ஆய்வில், நொய்யல் நதியில் தீங்கு ஏற்படுத்தும் ரசாய னங்கள் அதிக அளவில் இருப் பதை பற்றியும், கோவை திருப்பூ ரில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதைப் பற்றியும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர். நொய்யல் நதியை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்த  வேண்டி உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த நதியை பாது காக்க விரிவாக திட்டமிட்டு செயல் பட்டால் தான் எதிர்கால சந்ததியை யும் பாதுகாக்க முடியும் என்று கூறி னார்.  திருப்பூரில் தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புகளிடம் நன் கொடை பெற்று திருப்பூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக ஈரோட்டில் பவானி ஆற்று கரையில் தான் ரசாயன கழி வுகளால் புற்றுநோய் தாக்கம் அதிக மாக இருப்பதாக கூறப்பட்டு வந் தது. ஆனால் தற்போது நொய்யல் ஆற்று கரையில் கோவை, திருப்பூ ரில் புற்றுநோய் பாதிப்பு அதிக மாக உள்ளதை பற்றி ஆய்வில்  வெளிவந்துள்ளது. தொலை நோக்குப் பார்வையில் தமிழ்நாடு  அரசு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர்.