சிவகங்கை, ஜூலை 17-
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழராங்கி யம் கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை ஜுலை 16 அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத் தார்.
இப்பகுதியில் உற்பத்தியாகிற பாலை கொள்முதல் செய்து சேமித்து வைத்து, பின்னர் ஆவினுக்கும் விற்பனைக்கும் பயன் படுத்துவதற்கு இந்த பால் குளிரூட்டும் நிலை யம் உருவாக் கப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட் சத்து 43 ஆயிரம் வழங்கினார். ரூ.20 லட்சம் ஆவின் நிர்வாகத்தில் இருந்து வழங்கப் பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரிய கருப்பன், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவரும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான சேங்கை மாறன் மற்றும் பலர் பேசினர். பால் குளி ரூட்டும் நிலையம் அமைக்கஇடம் கொடுத்த சேகரை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சால்வை அணிவித்து பாராட்டி னார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், “திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான சேங்கைமாறன் பொறுப்புக்கு வந்த பின்பு பால் உற்பத்தி உயர்ந்துள் ளது. இதனைச் செய்த சேங்கை மாறனை பாராட்டுகிறேன்.
கடந்த ஆட்சி யில் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்து 9 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. இதில் 5 ஆயிரம் லிட்டர் பால் ஆவினுக்கு வழங்கி வருகின்றனர். குளிரூட்டும் நிலை யம் அமைவதற்கு 12 சென்ட் இடம் வழங்கிய திமுக பொறுப்பாளர் சேகரை பாராட்டு கிறேன். பால் குளிரூட்டும் மையத்தால் 34 கிராம விவசாயிகள், பால் உற்பத்தி யாளர்கள் பயன் பெறுகின்றனர் என்று கூறினார்.