districts

img

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

தஞ்சாவூர், நவ.12 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் துக்கு, பூக்கொல்லையில் புதிதாக ரூ.3.73  கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை  காணொலி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, புதிய கட்ட டத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர்  நா.அசோக்குமார், மாவட்ட ஊராட்சி முகமை, திட்ட இயக்குநர் முனைவர் மு.பால கணேஷ், ஒன்றியக்குழு தலைவர் மு.கி. முத்துமாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றினார்.  தொடர்ந்து, ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கத்தை புதிய அலுவல கத்தில் உள்ள அவரது அறையில் சட்டமன்ற  உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவ லர்கள் அமரவைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  இதில், வட்டாட்சியர் இரா.தெய்வானை, ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசு அலுவ லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.