பொது விநியோக கட்டடம் திறப்பு பாபநாசம், நவ.8 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் ரூ. 12.66 லட்சத்தில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டடம், ரூ.16.55 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், புத்தூரில் ரூ.12.67 லட்சத்தில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டடத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். பட்டுக்குடி, புத்தூரில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சுமதி, ஊராட்சி துணைத் தலைவர் இந்திரா காந்தி, ஒன்றியக் கவுன்சிலர் சுமதி, ஊராட்சிச் செயலர் முருகையன், கிராம மக்கள் பங்கேற்றனர்.