districts

img

திண்டுக்கல் சேடபட்டியில் நேத்ரா பெட்ரோல் பங்க் திறப்பு விழா

திண்டுக்கல், ஜுன் 11- திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு சாலையில் சேடபட்டியில்  நேத்ரா ப்யூ யல்ஸ் பெட்ரோல் பங்க் திறப்பு விழா ஜூன் 9 ஞாயி றன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  கலந்து கொண்டு தலைமை உரை யாற்றினார்.  திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் முன்னிலை வகித் தார்.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேத்ரா பங்க் பெட்ரோல் பங்க்-ஐ திறந்து வைத்தார்.  கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் மதுக்  கூர் இராமலிங்கம், கே.பால பாரதி, வழக்கறிஞர் நிர்மலா ராணி, இருதய சிறப்பு மருத்  துவர் டாக்டர் இரா.அமுத நிலவன்  ஆகியோர் கலந்து  கொண்டனர். பொது மருத்து வர் டாக்டர் கு.இராஜேஸ்வ ரன் நன்றி உரையாற்றினார். அமைச்சர் ஐ.பெரியசாமி  பெட்ரோல் பங்கை திறந்து வைத்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,  இந்த சாலையில் வருடத் திற்கு 300 நாட்கள் பய ணம் செய்கிறேன். இந்த பெட்  ரோல் பங்க்கை பொறுத்த வரை தரத்திற்கு உத்தர வாதம் இருக்கும். அதில் எந்த  சந்தேகமும் இல்லை. இந்த  பெட்ரோல் பங்க் மென்  மேலும் சிறந்து விளங்க  வேண்டும் என வாழ்த்துகி றேன் என்று கூறினார்.  கே.பாலகிருஷ்ணன்  சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி யில் சிபிஎம் வேட்பாளராக ஆர்.சச்சிதானந்தம் நிறுத் தப்பட்டு தமிழ்நாட்டிலேயே மூன்றாவதாக அதிக வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றி ருக்கிறார். இந்த வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இரவு பகலாக அந்த மகத்  தான பணியை  அமைச்சர் ஐ. பெரியசாமி ஆற்றியிருக்கி றார்.  மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்  மக்கள்  சேவகர்  டாக்டர் ராஜேஸ்வ ரன்.  டாக்டர் ராஜேஸ்வரன் மகன் அமுதநிலவன் இரு தய நோய் சிறப்பு மருத்துவ ராக பணியாற்றிக் கொண்டி ருக்கிறார். வினோத் ராஜேஸ் வரன் ஆஸ்திரேலியா நாட்  டில் சிறந்த மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கி றார். ஒரு மருத்துவக்குடும் பத்தை உருவாக்கிய பெருமை  டாக்டர் ராஜேஸ்வரனை சாரும். மறைந்த தோழர்கள் உமாநாத், பாப்பா உமாநாத் குடும்பத்தின் வாரிசுகளாக மருத்துவத்துறையில் சிறந்து வளர்ந்திருக்கிறார் கள். மேலும் ஒரு இயற்கை வேளாண் விவசாயியாக டாக்டர் ராஜேஸ்வரன் இந்த  தோட்டத்தை பராமரித்து வருகிறார்.  அத்தோடு இந்த  பெட்ரோல் பங்க் தொழிலை துவங்கி இருக்கிறார். அவ ருக்கு மனமார்ந்த வாழ்த்துக்  களை தெரிவித்துக்கொள்கி றேன். டாக்டர் ராஜேஸ்வரன் மாணவர் பருவத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக சேர்ந்து அந்த இயக்கத்தை வழி நடத்தியவர். இப்போது வரை நமது கட்சியில் ஒரு நெருக்கமான உறவோடு இருந்து வருகிறார். மக்கள்  சேவையில் மிகுந்த ஆர்வம்  கொண்டவர். அவர் எந்த  துறையை தேர்ந்தெடுத்தா லும் அதில் சாதனை புரிபவர். அந்த வகையில் இந்த பெட்  ரோல் பங்க்கையும் சிறப்பாக  நடத்துவார் என்று தெரிவித் தார்.