மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை போராளி தியாகி முத்துவீரன் நினைவு அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை மாலை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் நடைபெற்றது. விழாவிற்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு செங்கொடி ஏற்றினார். முத்துவீரன் நினைவு அலுவலகத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்து வைத்தார். கல்வெட்டை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார்.