தஞ்சாவூர், மார்ச் 10 - தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில், செய்தி மக்கள் தொ டர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில்,அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் சனிக்கிழமை மாலை தொ டங்கி வைத்தார். இந்த கண் காட்சி மார்ச் 15 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பரதநாட்டி யம், கும்மி நடனம், கரகாட்டம், நடனம், ஒயிலாட்டம், கிராமிய நட னம், செவ்வியல் நடனம், கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், நாட்டுப் புறப் பாடல், வயலின் கச்சேரி, கீ- போர்டு கச்சேரி போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 5 மணி முதல் நடைபெறு கிறது. மேலும், பல்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள், 7டி திரை யரங்கம், ராஜாளி பறவைகள் பூங்கா, சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சா வூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்கள், இசை நீரூற்று, சிறுவர்கள் புகை வண்டி, தஞ்சாவூர் புவிசார் குறி யீடு பொருட்கள் ஆகியவை அமைந்துள்ளன.
பெரம்பலூர் பெரம்பலூரில் அமைக்கப் பட்டிருந்த புகைப்படக் கண் காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் சனிக்கிழமை தொடக்கி வைத்துப் பார்வை யிட்டார். இந்நிகழ்வில் பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிர பாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கண்காட்சியில் “முதல மைச்சருடன் சுய புகைப்படம்” (Selfie with CM) என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் புகைப்படத்தின் அருகில் நின்று போக்குவரத்துத் துறை அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கண் காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களும், சிறுவர் சிறுமி யர்களும் தமிழ்நாடு முதலமைச்ச ரின் புகைப்படம் அருகில் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் 15 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை யும், தலா ரூ.1.40 லட்சம் மதிப்பி லான ரொட்டோவேட்டர் வேளாண் கருவிகளை 5 பேருக் கும், ரூ.18 லட்சம் மதிப்பில் வேளாண்மை இயந்திரமய மாக்கல் திட்டத்தின் மூலம் வேளாண் கருவிகளையும், தலா ரூ.87,500 வீதம் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணையையும், மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி உபகர ணங்கள், மூன்று சக்கர வண்டிகள் என மொத்தம் 40 பயனாளி களுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.