திருவாரூர், ஆக.8-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும், விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவருமான எம்.உத்திரா பதி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரு வாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம், கீழகல்விக் குடியில் கல்வெட்டு திறக் கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.சண்முகம் தலைமை வகித்தார். வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.ராதா, மாணிக்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரமணி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
தோழர் எம்.உத்திராபதி நினைவு கல்வெட்டை சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.எஸ்.கலியபெருமாள் ஏற்றினர். வேடம்பூர் கிரா மத்தைச் சார்ந்த எம்.பால சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
இதில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்ரமணி யன், ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.