தஞ்சாவூர், செப்.20 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிய இரு வகுப்ப றைகள் கொண்ட கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ளது. இதனை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, திறந்து வைத்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பட்டுக் கோட்டை கல்வி மாவட்டம்) வ.மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.சாமிநா தன், செல்வேந்திரன், வட்டாரக் கல்வி அலுவ லர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரி யர் விஜயலெட்சுமி வரவேற்றார். பள்ளி ஆசிரியர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில், மழைக்காலங்களில் குழந்தைகள் வகுப்ப றையில் அமர்ந்து படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் மாண வர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று வகுப்பறை கட்டடத்திற்கு சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நிதி ஒதுக்கீடு செய்தார்.