districts

img

தரங்கம்பாடியில் ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறை, ஏப்.9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட  திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரு மான நிவேதா எம்.முருகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து வாக்குச் சேகரித்தார். நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி, துணைத்  தலைவர் பொன்.ராஜேந்திரன் மற்றும்  பேரூராட்சி அவை தலைவர் கந்தசாமி, இந்தியா கூட்டணி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.