districts

img

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு ஆரம்பப்பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா

கும்பகோணம், பிப்.29-  கும்பகோணம் தொகுதி சாக் கோட்டை ஊராட்சியில்  78 ஆண்டு கள் பழமையான, பகுத்தறிவு பாட சாலை என பெயரிட்ட ஆரம்பப் பள்ளி இயங்கி  வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை மிகவும் சிதலமடைந் திருந்ததால் மாநிலங்களவை உறுப் பினர் சண்முகம் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.  இந்த பகுத்தறிவு அரசு ஆரம்பப் பள்ளியில் தந்தை பெரி யார், கலைஞர் கருணாநிதி. கி.வீர மணி என மூத்த தலைவர்கள் மாணவர்களை சந்தித்து  உரை யாடியுள்ளனர். இப்பள்ளிக்கு தந்தை பெரியார் நன்கொடை வழங்கியுள்ளார் .மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் இப்பள்ளி யின் முன்னாள் மாணவர்  ஆவார். புதிதாக கட்டப்பட்ட பகுத்தறிவு ஆரம்ப பாடசாலை வகுப்பறையை திராவிட கழக தலைவர்  கி.வீர மணி திறந்து வைத்தார்,இந் நிகழ்ச் சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம் முன்னிலை வகித் தார். கும்பகோணம் சட்டமன்ற உறுப் பினர் சாக்கோட்டை க. அன்பழகன்  வரவேற்றார். இந்நிகழ்வில் மாநக ராட்சி துணை மேயர் சு. ப.தமிழழ கன், ஒன்றிய துணை பெருந்தலை வர் டி கணேசன்,  வழக்கறிஞர் கரி காலன், நிம்மதி அவை தலைவர் வாசுதேவன் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.