தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற, கோவி.செழியன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்திற்கு வருகைத் தந்தார். அவரை, மமக தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அமைச்சராக பொறுப்பேற்ற கோவி.செழியனுக்கு, பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் தமுமுக பொதுச் செயலர் ஹாஜாகனி, தமுமுக மாநிலச் செயலர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்.