திருச்சிராப்பள்ளி, ஏப்.25-
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சிராப் பள்ளி தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந் துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் திருச்சி ராப்பள்ளி மாவட்டத் திரைக் கலைஞர்கள் வாசிப்பு இயக்கம் நடத்தினர். எழுத்தாளர் சீத்தா எழுதிய ராசாத்தி நூல் குறித்த ஆய்வு-வாசிப்பு இயக்கம் நடந்தது.
நிகழ்வில் மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ், கிளைச் செயலாளர் லாரன்ஸ் லூக், கிளைப் பொருளாளர் சந்துரு, மைக்கேல், நிரஞ்சன், அபிஷேக், லலிதா, வல்லரசு உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கார்த்திக் வரவேற்றார். ஊடகப் பொறுப்பா ளர் விஜய்வர்மா நன்றி கூறினார்.
தேசியக் கல்லூரி மேனாள் முதல்வர் சிவ. ராமமூர்த்தி யின் 75- ஆவது பிறந்த நாளையொட்டி 75 நூல்கள் வழங்கப் பட்டது. நூல்களை நடனப் பள்ளி நிறுவனர் விமலா பெற்றுக்கொண்டார்.