districts

திருத்துறைப்பூண்டியில் மார்ச் 23 வாலிபர் சங்கம் மாபெரும் பேரணி

குடவாசல், மார்ச் 12 - கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பனில் உள்ள மாரியம்மன் கோவில் மண்ட பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.எஸ்.ஜெய் கிஷ் தலைமை வகித்தார். மார்ச் 23 ஆம் தேதி திருத்து றைப்பூண்டியில் அண்ணல்  அம்பேத்கர் சிலை அருகி லிருந்து புறப்பட்டு விவசாயி களின் விடிவெள்ளி பி.எஸ்.ஆர் நினைவு மண்டபம் வரை  பேரணி நடைபெற உள்ளது.  இந்த பேரணியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும்.  மதவாத வெறுப்பு அரசி யலை கைவிட வேண்டும் என்ற முழக்கத்துடன் மாவீ ரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தில் ஓராயிரம் இளைஞர்கள் அணிவகுப்பு கொண்ட மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்து  கொள்ள வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் மாநில துணைச் செயலாளர் சி.பால சந்திரபோஸ் சிறப்புரை யாற்றினார். முன்னதாக மாவட்டத் தலைவர் எஸ்.எம். சலாவுதீன், மாவட்ட செயலா ளர் கே.பி.ஜோதிபாசு புதிய  நிர்வாகிகளை தேர்வு செய்து  அறிவித்தனர். இதில் தலை வராக கே.குபேந்திரன், செய லாளராக எம்.எஸ்.ஜெய்கிஷ், பொருளாளராக எஸ்.குறளரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;