தஞ்சாவூர், மே 14-
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில் ஒரே நாளில் 1,281 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காக தேசிய அளவிலான மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியு மான ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வக்கீல் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்கு களுக்குத் தீர்வு காணப்பட்டது.
மோட்டார் வாகன வழக்கு களுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வக்கீல் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 494 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 1,281 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4,23,52,902 அள வுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்று தரப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியு மான இந்திராகாந்தி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள உரிமை யியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வக்கீல்கள், நீதி மன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்து இருந்தனர்.