அறந்தாங்கி, ஆக.3-
வணிக நிறுவனங்களின் சோதனையில் அமலாக் கத்துறையை ஈடுபடுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கி றது. இதை ஏற்க மாட்டோம் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.
அறந்தாங்கியில் விக்கிரமராஜா செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:-
அப்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களும், வணிகர்களுக் கும் அன்றாடம் அவர்களு டைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறு கிறார்கள் இந்தத் தருணத் தில் ஒவ்வொரு மின் மீட்ட ருக்கும் மாதம் ரூ.60 வாடகை என்பதை அரசு திரும்பப் பெறவேண்டும்.
ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை 25 சதவீதம் கட்டாயம் குறைக்க வேண் டும். இதையும் தாண்டி அம லாக்கத்துறை வணிகர் களை சோதனை நடத்த அனு மதிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலத்திலிருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சரைச் சந்தித்து முறையிட இருக்கி றோம்.
அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் மாறி இருக்கிறது. எனவே தினசரி ரயில் சென்னையிலி ருந்து அறந்தாங்கி வரை இயக்க வேண்டும்.
கார்ப்பரேட் கம்பெனி கள் முழுவதுமாக வணிகர் களை அபகரிக்க தொடங்கி உள்ளது. இதில் மாற்றம் காண வழிவகை செய்ய வேண்டும். நகரம்- கிரா மங்களில் வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.